திருவள்ளூர் நவ, 16
திருவள்ளூர் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, செங்குன்றம் போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, கடன் உதவி என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 248 மனுக்களை அளித்தனர். அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.