Spread the love

திருச்சி நவ, 18

பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக அந்த ரயிலை நிறுத்தினார்.

அந்த பகுதிக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு மீண்டும் அந்த ரயிலுடன் இணைக்கப்பட்டன.

இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை அந்த ரயில் வந்தடைந்தது. பெட்டிகள் தடம் புரண்ட போது அதில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *