Spread the love

கரூர் நவ, 18

குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட நடைபாலம் கிராமத்தில் அப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் பல்வேறு கால்நடை நோய்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம் தொடங்கி வைத்தார். முகாமில் மாடு, ஆடு, கோழி, நாய், ஆகியவைகளுக்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

இதில் கரூர் மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குனர் முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொய்யாமணி தியாகராஜன், வைகநல்லூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் வைபுதூர் பெரியசாமி நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *