Spread the love

கரூர் ஜன, 29

தமிழக முழுவதும் கடந்த 45 மாதங்களில் 17.5 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கரூரில் ஆய்வு பணியின் போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது மக்களிடமிருந்து வந்த கோரிக்கை அடிப்படையில் புதிதாக 2500 முழு நேரம் மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *