Spread the love

சேலம் நவ, 12

தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27 ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச மாதிரி தேர்வு நாளை நடத்தப்பட உள்ளது.

ஏற்காடு அடிவாரத்தில் உள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 9 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், 2 பாஸ்போர்ட் போட்டோவை தேர்வை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *