Spread the love

விருதுநகர் நவ, 7

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது. முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பற்றியும் எடுத்துக்கூறினார். அதன் பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒற்றுமை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதல்வர் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *