சீர்காழி நவ, 6
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கீழவெளி கிராமம், அட்டக்குளம் பகுதி மற்றும் சாந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். வசந்த்குமார் பட்டேல், மனோகரன் முன்னிலை வகித்தனர். சுபம் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் சுதேஷ் ஜெயின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் குடல் புழு நீக்குவதற்கான மருந்துகள், சத்தூட்ட மருந்துகள், செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மேலும் இலவசமாக அனைத்து மருந்துகளும் கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுடர் கல்யாணசுந்தரம், சுசீந்திரன், சோலை, பிரசாந்த், சுபம் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜி.அன்பழகன், உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.