Spread the love

ஓசூர் நவ, 6

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் சட்ட மன்ற உறுப்பினருமான பிரகாஷ் தலைமை தாங்கி பேசினார். இதில், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஈரோடு இறைவன் திருப்பூர் கோவிந்தசாமி மற்றும் ஓசூர் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சத்யா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *