திண்டுக்கல் நவ, 2
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டாச்சியர் தனுஷ்கோடி வரவேற்று பேசினார்.
மேலும் ஷநிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார் நத்தம், எத்திலோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி கலந்து கொண்டனர். முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளை அரசு மருத்துவ எலும்பு நிபுணர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், ரயில் பஸ்பாஸ் வசதி கேட்டு சில மனுக்களும் அளிக்கப்பட்டது.
இந்த மனுக்களில் ஒரு சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆறுமுகம், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மிருனாலினி, மண்டலத் துணை வட்டாச்சியர்கள் சரவணன், மூர்த்தி, அபிராமி, வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அறிவழகன், பிரேமலதா, நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.