Spread the love

நெல்லை அக், 20

நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23 ம்தேதி தொடங்குகிறது. ஹசரத் சையதலி பாத்திமா, கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 23 ம் தேதி காலை முதல் மறுநாள் (திங்கட்கிழமை) வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
23-ந்தேதி காலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு குர்ஆன் தமாம் செய்தல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமை தாங்குகிறார். காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல், 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.

மேலும் 10 மணிக்கு சந்தனம் மெழுகுதல் நடைபெறுகிறது. இதில் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மாலை 3.30 மணிக்கு மவ்லூது ஹரீப் ஓதுதல், 5.30 மணிக்கு ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லிசில் காயல்பட்டினம் எஸ்.ஏ.எம்.சலாஹூத்தீன் பங்கேற்கிறார்.

இதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு ஹதீஸ் தொடங்குகிறது. இதில் பெட்டைக்குளம் காதர் மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், சென்னை கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹூமா தலைமை இமாம் சதக்கத்துல்லாஹ் பாகவி, மேலப்பாளையம் அலிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர், நெல்லை மேலச்செவல் சேக் மதார் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் காஜா ஹூசைன் ஆலிம் உஸ்மானி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இரவு 12 மணி முதல் நெல்லை ஜி.எஸ்.அபுபக்கர், மருத்துவர் ஏ.ரகிமா பேகம் குழுவினரின் இஸ்லாமிய கச்சேரி நடக்கிறது. 24 ம்தேதி காலை 5.45 மணிக்கு சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *