Spread the love

ஈரோடு அக்,15

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசு மாடு ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையானது. கன்றுக்குட்டிகள் ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்த சந்தைக்கு 75 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, சேலம், மதுரை உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.33 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும் விலை போனது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். நேற்று முன்தினம் கூடிய சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *