ஈரோடு ஆக, 10
தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் படிக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவ படிப்பு, சட்டம் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். 8,10ம் வகுப்பு முடிந்து தொழிற் பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.