திண்டுக்கல் அக், 14
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார், பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில நோய் தடுப்பு இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பழனி நகர திமுக. செயலாளர் வேலுமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.