திண்டுக்கல் அக், 17
வேடசந்தூரில், ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அமைதி அறக்கட்டளையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன் வரவேற்றார்.
மேலும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, வி.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலர் சித்ராசெல்வி, மாவட்ட குழந்தைகள் நல குழு வக்கீல் ஜெயசுதா ஆகியோர் கலந்துெகாண்டனர்.
ஊர்வலத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்துக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.