Spread the love

செங்கல்பட்டு அக், 14

செங்கல்பட்டு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து மாலை மீண்டும் ஆந்திர மாநிலம் புறப்படுவதற்காக ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் சுத்தம் செய்த போது, அதில் தனித்த நிலையில் 2 பைகள் இருந்ததை கண்டனர்.

உடனடியாக ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது ஒரு பையில் 3 பண்டல்கள் வீதம் மொத்தம் 6 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *