செங்கல்பட்டு மே, 13
தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை குமரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.