Spread the love

செங்கல்பட்டு மார்ச், 31

சென்னை புறநகரில் உள்ள இரண்டு முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கட்டண உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சுங்கச்சாவடியில் ஒருவழிப்பயணம் மற்றும் அதே நாளில் திரும்ப பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 50 ஒற்றைப் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ்பட்டணம் ரூ.60 முதல் ரூ190 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர், தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ்கட்டணம் பத்து ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *