செங்கல்பட்டு அக், 17
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டது.
இதனை வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் முன்னிலையில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு திறந்து வைத்தார். அப்போது சித்தாமூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, திமுக. ஒன்றிய செயலாளர் சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.