Spread the love

தர்மபுரி அக், 11

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, உபகரணங்கள் கேட்டும் மொத்தம் 446 மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உஷாராணி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *