Spread the love

நெல்லை அக், 9

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமலை கொழுந்துபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிடத்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

இந்நிலையில் பாளை புதுப்பேட்டையை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுந்தர் என்பவர் தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருகிறார். இந்த வீட்டு கட்டிடப்பணியில் செல்லத்துரை ஈடுபட்டு வந்தார். நேற்று வழக்கம் போல் அவர் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செல்லத் துரையின் மகள் ஜெனிபர் மற்றும் குடும்பத்தினர் இன்று பாளை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது அவர்களது உறவினர்கள் கூறும்போது, செல்லத்துரை உயிரிழப்பிற்கு வீட்டின் உரிமையாளர், ஒப்பந்ததாரர், என்ஜினீயர் ஆகியோரின் அலட்சியபோக்கே காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த செல்லத்துரை குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *