Spread the love

நெல்லை அக், 8

தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது.

இதில் சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவி அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை அமைச்சூர் சிலம்பம் சங்கம் பொருளாளர் காணி, மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் விஜயநாராயணம், ஊசிகாட்டான் ரூபன், இந்திரன் சிலம்பம் பள்ளி செயலாளர் சிவக்குமார், வேந்தன் நெல்மணி, செயலாளர்களான சின்னத்துரை சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி முடிவில் செயலாளர் ஜென்சி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பதிவை சிலம்பம் பள்ளியின் பொருளாளர் சாமுவேல், பானுமதி, டேனியல், மரிய கோல்டா சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *