Spread the love

தர்மபுரி செப், 24

மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு 214 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், வக்கீல் முருகன், பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்க சரவணன், மேலாண்மை குழு தலைவர் பிரமிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *