Spread the love

திருவனந்தபுரம் செப், 21

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7 ம்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். நேற்று 13வது நாளாக கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் பாதயாத்திரை சென்றார்.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 2 தினங்களில் தொடங்குகிறது.

இந்த நிலையில் சோனியாக காந்தி கட்சி தலைவர் பதவி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை நடத்தி வரும் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் டெல்லிக்கு அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் நேற்று அவசரமாக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி நாளை மறுநாள் நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி செல்கிறார். அங்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு மீண்டும் கேரளாவுக்கு வருவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *