Spread the love

நீலகிரி செப், 21

ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில் மாவட்ட அளவிலான 12-வது செஸ் போட்டிகள் ஊட்டியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப்பிரிவினர் என 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். 6 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

பொதுப்பிரிவில் யோகேஷ், நபிலா, ரேவந்த், குயின் ஆப் ஷீபா, சால்மன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய வாலிபால் வீரர் சந்திரமோகன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும், சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் ஒய்.எம்.சி.ஏ., தலைவர் சார்லஸ், விளையாட்டு கமிட்டி தலைவர் தனசிங் இஸ்ரேல், நீலகிரி செஸ் சங்க செயலாளர் விவேக், பொது செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் துணை செயலாளர் விஷ்ணுபரணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *