Spread the love

புதுக்கோட்டை செப், 14

அன்னவாசல் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் சோலை. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.

பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளமும், 30 கிலோ எடையும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *