புதுக்கோட்டை செப், 16
இந்து சமூகம் குறித்து அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராசாவை கைது செய்யக்கோரி கறம்பக்குடி வட்டார பாரதியஜனதா சார்பில் சீனிக்கடை முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் அழகப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.