Spread the love

கன்னியாகுமரி செப், 14

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10 முதல் 15 வருடங்கள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 வருடங்கள் வரை இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. பரிந்துரை செய்யப்படும் இதனை பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழுவினரால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி ஆட்சியரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே குமரி மாவட்டத்தில் தேவாலங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *