சென்னை பிப், 21
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மொழிக்காக பல உயிரை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு, தமிழர்களின் உரிமை தான் கல்வி உரிமை, மொழி உரிமை என என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.