புதுடெல்லி செப், 16
ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வாழ்த்து செய்தியில் சமூகத்தின் சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் குர்ஆனின் புனிதமான போதனைகளை உள்வாங்கி அமைதியான சமுதாயத்தை உருவாக்க இந்நாளில் உறுதி ஏற்போம் எனக் கூறியுள்ளார்.