அகமதாபாத் செப், 16
நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை புஜ்-அகமதாபாத் இடையே பிரதமர் மோடி என்று தொடங்கி வைக்கிறார். 100 முதல் 250 கிலோ மீட்டர் தூரமுள்ள நகரங்களை இணைக்கும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் அதிகபட்சமாக 16 பெட்டிகள் வரை இணைக்கலாம். ஒவ்வொரு பெட்டிகளில் வந்தே பாரத் ரயிலில் உள்ளதை போன்று சிசிடிவி, சார்ஜிங் பாயிண்ட், தானியங்கி கதவு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.