புதுடெல்லி செப், 12
உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதிகள் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங், டிப்ளமா படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது 18 முதல் 27 வரை இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ. 46,000 வழங்கப்படும். https://www.sci.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.