புதுடெல்லி செப், 7
பனாமாநாடு 130 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. பனாமா, மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியே தங்கள் நாட்டுக்குள் சட்ட விரோதமாக அகதிகள் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா அவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவுக்கு செல்லும் நோக்கத்துடன் காடு வழியாக வந்ததாக கூறி இந்தியர்கள் 130 பேரை பிடித்த பனாமா அரசு விமானத்தில் டெல்லிக்கு அனுப்பியுள்ளது.