புதுடெல்லி செப், 3
இந்திய கடற்படைக்கு 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏழு நவீன போர்க்கப்பல்கள் மற்றும் ராணுவத்திற்கு 1200 நவீன டாங்கிகள் தயாரிக்கும் திட்டத்திற்கு அரசு இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 1.3 லட்சம் கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு இன்று நடைபெற உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.