கொல்கத்தா செப், 3
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் அந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மருத்துவர் கொலை சம்பவத்திற்கு பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட அவரிடம் உண்மையை கண்டறியும் சோதனையை சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.