பாரிஸ் செப், 2
பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான டி 47 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிதிஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2.7 மீட்டர் உயரம் தாண்டி தனது அதிகபட்ச திறனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஏழாவது பதக்கத்தை கைப்பற்றியுள்ளது முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.