புதுடெல்லி ஆக, 25
மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 26 ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடக்க உள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. வேளாண் விலை பொருள்களில் எம் எஸ் பி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பட்ஜெட்டில் விவசாயிகளை மோடி அரசு புறக்கணித்துள்ளதாக விவசாய சங்கங்கள் விமர்சித்துள்ளன. அத்துடன் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக களம் காண உள்ளதாகவும் அவை அறிவித்துள்ளன.