திருவள்ளூர் ஜூலை, 19
தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும் கிடைக்கும் என்றார். அடுத்த தேர்தலில் 19 அமைச்சர்கள் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.