தூத்துக்குடி ஜூலை, 18
துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்னை கண்டதும் வேகமாக ஓடி வந்தார்கள் கீழே விழுந்து விடப் போகிறார்கள் என பொறுமையாக வர சொன்னேன். இதை சிலர் தவறாக திரித்து பேசியது வருத்தமாக உள்ளது”. என தெரிவித்துள்ளார்.