தருமபுரி ஜூலை, 11
தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் தினசரி அணுகும் அரசு துறைகளில் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 8.74 லட்சம் மனுக்களும் இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது.