விழுப்புரம் ஜூலை, 9
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. அத்தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனை அடுத்து நடத்தப்படும் இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். 276 வாக்குச்சாவடிகளின் நடைபெறும் வாக்கு பதிவு 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர்.