விழுப்புரம் ஜூன், 13
விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்தது. பொன்முடி ஜெகத்ரட்சகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மஸ்தான் பெயர் இடம்பெறவில்லை. அண்மையில் அவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.