Spread the love

திருவாடானை ஜூன், 13

திருவாடானையைச் சேர்ந்தவர் கருமணி ஜோசப் முன்னாள் ராணுவ வீரர் இவரது வயது 54.இவர் நேற்று மாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவாடானை காவல்துறையினர் அவரது உடலை மீட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *