தூத்துக்குடி ஜூன், 6
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அந்த சான்றிதழுடன் சென்னை சிஐடி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த கனிமொழி, அதனை தனது தாயாரிடம் காண்பித்து ஆசி வாங்கி மகிழ்ந்தார்.