Spread the love

நெல்லை ஏப்ரல், 18

நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நெல்லையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *