நாமக்கல் ஏப்ரல், 12
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம்(வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற ஒன்றை உருவாக்கப்படவில்லை. சட்டப்பேரவை தேர்தலின் போது தமிழ்நாடு வங்கி ஏற்படுத்துவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார் ஆனால், இன்றுவரை வங்கியை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.