கோவை ஏப்ரல், 11
பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை நமீதாவை காவல்துறையினர் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாதிய ஜனதா கட்சி கூட்டத்திற்கு கணவருடன் வந்த அவரை காவல்துறையினர் பொதுமக்கள் செல்லும் வழியில் போக அறிவுறுத்தினர். இதனால் சில நிமிடங்கள் காவல்துறையினருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவர் விவிஐபி கேட் வழியாக உள்ளே சென்றார்.