Spread the love

நாகப்பட்டினம் ஏப்ரல், 11

நாகையில் பாஜகவினர் பிரச்சாரத்தின் போது வைத்த பட்டாசு வெடியால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷை வரவேற்று பாஜகவினர் பட்டாசுகளை வெடித்தனர். அப்போது பரவிய தீயால் அருகில் இருந்த இரண்டு குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து நாசமாயின சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *