தர்மபுரி ஏப்ரல், 9
அதிமுகவுக்கும், திமுகவிற்கும் மாறி மாறி வாக்களித்தது போதும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் என்னை விட அவர்தான் முதலில் சென்று இருப்பார். 57 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தும் நமது வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது எந்த விடியலும் இல்லை என்றார்.