தென்காசி ஏப்ரல், 8
மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே. பி நட்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் ராஜித சிங் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாமக்கல், நாகை, தென்காசி தொகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.