திருப்பூர் ஏப்ரல், 7
டாஸ்மாக் சரக்கு பாதுகாப்பு தரும் அரசு விவசாய பொருட்களை பாதுகாக்க எதையும் செய்யவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சீமான், விவசாயிகள் இந்த நாட்டில் தங்கள் உரிமைக்காக டெல்லியில் போராடுகிறார்கள். மதுவை பாதுகாக்க காவல் துறையினரால் காவல் போட முடிந்த அரசால், நெல்லை பாதுகாக்க முடியாமல் மழையில் நனைய விட்டுள்ளனர் என்று விமர்சித்தார். மேலும் விவசாய வளராமல் ஒரு நாடு நிச்சயம் வளராது என்று அவர் கூறினார்.